
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பகுதியில், தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினரான கப்டன் பண்டிதரின் 37ஆம் ஆண்டு நினைவு தினம் அவரது இல்லத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
அன்னாரின் வீட்டில், உருவ படத்துக்கு மாலை அணிவித்து தீபம் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமுமான எம். கே.சிவாஜிலிங்கம் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அத்துடன் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர்கள், மற்றும் குடும்பத்தாரும் இணைந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
கடந்த 1985ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி அச்சுவேலியில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாமை படையினர் முற்றுகையிட்டதால் ஏற்பட்ட சமரில் கப்டன் பண்டிதர் உட்பட பல போராளிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

