இலங்கை – சீன நட்புறவிற்காக கடல் நடுவே படகு போட்டி!

இலங்கை – சீன நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் பாய்மரப் படகு போட்டி ஒன்று ஞாயிற்றுக்கிழமை (9) கொழும்பு துறைமுக நகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் சீன வெளி விவகார அமைச்சர் வாங் யீ ஆகியோரினால் ஆரம்பித்து வைத்தனர்.

இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலின்படி, மொத்தம் 64 படகுகள் தொடக்க நிகழ்வில் பங்கேற்றுள்ளன.

இலங்கை – சீன இராஜதந்திர உறவுகளின் 65 வது ஆண்டு நிறைவு மற்றும் இரப்பர் – அரிசி ஒப்பந்தத்தின் 70 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் பாய்மரக் கோப்பை படகு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *