கொழும்பு துறைமுக நகர நடைபாதை இன்று முதல் மக்கள் பாவனைக்கு திறப்பு!

கொழும்பு துறைமுக நகர நடைபாதை இன்று (திங்கட்கிழமை) மக்கள் பாவனைக்காக திறக்கப்படவுள்ளது.

அதற்கமைய, இன்று முதல் தினந்தோறும் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரையில்  குறித்த நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்த முடியும்.

கொழும்புத் துறைமுக நகர நடைபாதையானது 500 மீட்டர் நீளத்திற்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் உள்ள கொழும்புத் துறைமுக நகர நுழைவாயில் ஊடாக அதனுள் உட்பிரவேசிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான இராஜதந்திர உறவின் 65 ஆவது வருட பூர்த்தியினை முன்னிட்டு நேற்று இடம்பெற்ற நிகழ்வின்போது, குறித்த நடைபாதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக், சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ உள்ளிட்டோர் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *