அதிகரிக்கும் கொரோனா : அதிகாரிகளுடன் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில், இன்று (திங்கட்கிழமை) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் மருத்துவத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர், மருத்துவக்கல்வி இயக்குனர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமிழத்தில் கடந்த ஆறாம் திகதி முதல் தினமும்  இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை  இரவு நேர ஊரடங்கு  அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *