இன்று முதல் நாட்டில் திட்டமிட்ட மின்தடை!

இன்று முதல் நாட்டில் திட்டமிட்ட மின் தடைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதற்கான அனுமதியை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

இன்று முதல் ஒரு மணித்தியாலம் முதல் இரண்டு மணித்தியாலம் வரையான மின் வெட்டு நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கையை அடுத்தே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
எரிசக்தி அமைச்சால் மின்சார சபைக்கு எரிபொருள் வழங்கப்படாமை மற்றும் களனி திஸ்ஸ அனல் மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி ஒன்றில் ஏற்பட்டுள்ள பழுது காரணமாகவே மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *