
நாட்டின் அனைத்து உள்ளூராட்சிமன்றங்களினதும் பதவிக் காலங்கள் மேலும் ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டுள்ளன.
இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றுஅரசாங்க சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனினால் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டின் அனைத்து உள்ளூராட்சிமன்றங்களினதும் பதவிக் காலங்கள் 2023 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், 24 மாநகர சபைகள்,41 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளின் பதவிக் காலங்களே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.