சு.க.எம்பிக்களை பெரமுன கறிவேப்பிலை ஆக்கிவிட்டது! மைத்திரிபால சிறிசேன விசனம்

சு.கவுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறை வேற்றாத சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் தேர்தலின் பின்னர் சு.க. பாராளுமன்ற உறுப்பினர்களை குழம்பில் உள்ள கறி வேப்பிலை போல் தூக்கி எறிந்துள்ளனர் என
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு
உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குவழங்கிய வாக்குறுதிகள் எதனையும் அவர்கள் நிறைவேற்றவில்லை.

அத்தோடு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு
இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையின் நிபந்தனைகள் எதுவும் இன்று வரை நிறைவேற்றப்பட வில்லை.

இதற்கு முன்னர் இவ் வாறான உணவுத் தட்டுப்பாடு நாட்டில்
இருந்ததில்லை-என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *