
‘மர்ம குடில்’ என அழைக்கப்படும் நிலவின் மேற்பரப்பில் காணப்படும் ஒரு பொருள் உண்மையில் முயல் வடிவ பாறை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் யூட்டு-2 விண் ஊர்தி, இந்த மர்மக் குடிலை, பூமியிலிருந்து பார்க்கமுடியாத நிலவின் பக்கத்தில் கடந்த நவம்பர் மாதம் கண்டுபிடித்துள்ளது.
இந்த இடத்தை நெருங்குவதற்கு யூட்டு-2 விண் ஊர்திக்கு 3 மாதங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது அதன் தெளிவான படங்களை அனுப்பியுள்ளது.
அடையாளம் தெரியாத இந்த பொருள் ஒரு சிறிய ஆனால் ‘உயிருள்ள’ வளைந்திருக்கும் முயல் போன்ற ஒரு வித்தியாசமான வடிவ பாறை என்பது, யூட்டு-2 விண் ஊர்தி அனுப்பியுள்ள படங்கள் மூலம் உறுதியாகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த பாறையின் சில பகுதிகள் முயலின் உணவு மற்றும் கழிவுகளைக் காட்டுவதாக விஞ்ஞானிகள் விவரித்துள்ளனர்.
எனினும் இது ஒரு தற்செயலான நிகழ்வு என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
யூட்டு-2 விண் ஊர்தி, 2019ஆம் ஆண்டு முதல் நிலவின் இன்னொரு பக்கத்தை ஆராய்வதற்காக சீனாவினால் அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது..