
புத்தளம் – மணதீவு – செவ்வன்தீவு பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இருவருக்குமிடையிலான வாக்குவாதம் மோதலாக மாறியதில் சந்தேகநபர் மற்றைய நபரைக் கட்டையால் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பலத்த காயங்களுக்குள்ளான குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 3ஆம் தூண் – புத்தளம் பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என இனங்காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
படகு விபத்தில் மாதகல் மீனவர் உயிரிழப்பு : கடற்படை மீது மக்கள் குற்றச்சாட்டு