10 நாள்களுக்கான எரிபொருள் கையிருப்பில்!

சிறிலங்கா எரிபொருள் பெட்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கையிருப்பில் அடுத்த 10 நாள்களுக்குத் தேவையான எரிபொருள் இருக்கின்றது. எனினும், பற்றாக்குறையாக இருக்கும் தொகையை அமைச்சரவை வழங்கமென நம்புகிறேன் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் நாள்களுக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக சுமார் 200 மில்லியன் டொலர்கள் அவசியம். இதற்குப் பற்றாக்குறையாக இருக்கும் பணத்தை உடனடியாக வழங்குமாறும் இன்று நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கவுள்ளேன். அதேவேளை, ஜனவரி மாதத்தில் நாட்டின் பயன்பாட்டுக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்ய 350 மில்லியன் டொலர்கள் அவசியம். தற்போது பெட்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் 150 மில்லியன் டொலர்கள் மாத்திரமே கையிருப்பில் உள்ளது.

இதனால், ஜனவரி மாதத்துக்கான எரிபொருள் தேவையைப் பூர்த்திசெய்ய பற்றாக்குறையாக இருக்கும் 200 மில்லியன் டொலர்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்கவுள்ளேன். இதனிடையே, சில தினங்களுக்கு முன்னர் சிங்கள வானொலி ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அமைச்சர் கம்மன்பில, ஜனவரி மாத நடுப்பகுதியில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *