
முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் கடந்த 8ஆம் திகதி பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டநிலையில், அதனுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 33 வயதுடைய ஆண் ஒருவர் கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.இதே கிராமத்தில் வசித்த இரண்டு பிள்ளைகளின் தயாரான யோகராசா றாஜினி (வயது – 36) என்பவரே சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
உயிரிழப்புத் தொடர்பில் முள்ளியவளைப் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின்போது, உயிரிழந்த கணவனைப் பிரிந்துவாழும் அந்தப் பெண்ணுடன் குடும்பம் நடத்தினார் என்ற குற்றச்சாட்டில், கிளிநொச்சியைச் சேர்ந்த 33 வயதுடைய ஆண் நேற்றுக் கைதுசெய்யப்பட்டார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட தென்னந்தோட்டக் காணியிலுள்ள கிணற்றுக்கு அருகில் பெண்ணின் கைப்பை உள்ளிட்ட சில தடயப்பொருள்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.
அந்தப் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டு, கிணற்றுக்குள் வீசப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.