வவுனியாவில் பொலிஸாரின் ஏற்பாட்டில் மாபெரும் சிரமதானம்!

வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் டி .தம்மிக்க விஜயசிறியின் ஆலோசனைக்கு அமைவாக தைத்திருநாளை முன்னிட்டு நகரில் மாபெரும் சிரமதானம் ஒன்று இன்று                                (செவ்வாய்க்கிழ்மை) காலை   பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது .

தைத்திருநாளை முன்னிட்டு நகரைத் தூய்மையாக வைத்திருப்போம் எனும் கருப் பொருளில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டுள்ள சிரமதானமானது கண்டிவீதி ,ஹொறவப்பொத்தான வீதி , புகையிரத வீதி , மன்னார் வீதி போன்ற வீதிகளிலிருந்து ஆரம்பமாகி   இடம்பெற்றது .

வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி , வவுனியா வர்த்தகர் சங்கத்தினர், அரச உத்தியோகத்தர்கள், சமூக ஆர்வலர்கள், முச்சக்கரவண்டி சங்கம் , வர்த்தகர்கள் ,பொதுமக்கள் ,  பொலிஸார் எனப்பலரும் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *