
தமிழ் மக்களை எதுவும் செய்யலாம் என்ற எண்ணத்தில் கடல் படை உள்ளது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
இவ்வளவு பெரிய சமுத்திரத்தில் சிறிய படகு மீது தெரியாமல் எவ்வாறு கடல் படை படகு மோதும், அது எவ்வாறு விபத்தாக மாறும் என்பது சொல்வதற்கு வேடிக்கையாக உள்ளது.
மக்களின் காணிகளை கடல் படை சுவீகரிக்க முற்பட்ட போது போராடிய இருவரில் ஒருவர் மீது காஞ்ச வழக்கு போடப்பட்டுள்ளது,மற்றோருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தமிழ் மக்களை என்னவும் செய்யலாம் என்ற மனநிலயில் இவர்கள் உள்ளனர்.
யாழ்ப்பாணத்தை சுற்றி ஆயுதம் தாங்கிய படைகள் தான் உள்ளனர்.எதையும் எம்மால் சூத்திராக செய்ய முடியாது என்ற தகவலை தான் அரசு சொல்கிறது.
இதை சர்வதேசம் கண்டுகொள்ளவில்லை.அனுதாபங்களை மட்டுமே சொல்கின்றனர்.
இனி இப்படி ஒரு துயரச் சம்பவம் நடைபெறாது என்று சொல்வதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என தெரிவித்துள்ளார்.