
உள்ளூர் சந்தையில் அரிசியின் விலை எதிர்பாராத வகையில் உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே மக்களுக்கு நியாயமான விலையில் அரிசியை வழங்குவதற்குத் தேவையான அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
திறந்த சந்தையில் போதியளவு அரிசிக் கையிருப்பு இருப்பதை உறுதி செய்யும் வகையில் அரிசியை இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன முன்மொழிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, 300,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சம்பா அரிசிக்கு மாற்றீடாக 200,000 மெட்ரிக் தொன் நாட்டு அரிசியையும் 100,000 மெட்ரிக் தொன் GR 11 குறு தானிய அரிசியையும் இறக்குமதி செய்வதற்கு வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.