இவ்வருடத்தில் மாகாண சபைத் தேர்தல் – ரமேஷ் பத்திரன

மாகாண சபைத் தேர்தலை இவ்வருடத்தில் நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

24 மாநகர சபைகள் / 41 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகளின் பதவிக் காலத்தை நீடித்து நேற்று அதிவிசேட வர்த்தமானி ஒன்று வெளியிடப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக கொழும்பில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

தேர்தலுக்கு அஞ்சி ஒரு வருடத்திற்கு பதவிக் காலத்தை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்ததா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *