முல்லையில் நள்ளிரவு- வீடு புகுந்து வாள்வெட்டு!

முள்ளியவளை முறிப்பு பகுதியில் நேற்றுமுன்தினம் வீடு புகுந்த குழுவினர் குடும்பத்தலைவர் மீது வாள்வெட்டு நடத்தியுள்ளனர். அதில் படுகாயமடைந்த குடும்பத்தலைவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதே பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரம் புவனேந்திரராசா (வயது – 42) என்பவரே படுகாயமடைந்தார்.

வாள்வெட்டு நடத்தினார் என்ற சந்தேகிக்கப்படும் ஒருவரும் காயமடைந்தநிலையில், முல்லைத்தீவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. முள்ளியவளைப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *