எரிசக்தி அமைச்சருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு மூன்று மாதங்களுக்கு வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

இதனை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து 20 மில்லியன் ரூபாவை மோசடியான முறையில் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு விதிக்கப் பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதய கம்மன்பில தனது சட்டத்தரணிகள் ஊடாக முன்வைத்த சமர்ப் பணங்களைப் பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

பிரதிவாதியான அமைச்சர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக் காரர் இரண்டு தனிப்பட்ட விஜயங்கள் மற்றும் இரண்டு உத்தியோக பூர்வ விஜயங் களுக்காக வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதாக நீதிமன்றிற்கு அறிவித்தார்.

இதன்படி ஜனவரி 23ஆம் திகதி முதல் ஏப்ரல் 29ஆம் திகதி வரை தனது கட்சிக் காரருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைக் கருத்திற்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதி கம்மன்பிலவுக்கு குறித்த காலப்பகுதியில் விதிக்கப்பட்ட பயணத் தடை யை நீக்கியது.

இதேவேளை, நீதிமன்ற பாதுகாப்பிலிருந்த அவரது கடவுச்சீட்டைத் தற் காலிகமாக விடுவிக்கவும் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *