
மைத்திரி என்ன தான் புதிய அவதாரம் எடுத்தாலும் அடுத்த ஆட்சியை நாம் தான் அமைக்கப்போகின்றோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நம் நாட்டிற்கு பல விதமான பொருளாதார பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பல சுமைகள் காணப்படுகிறன.
நம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன, திடீரென முளைத்த தாமரை போல நான் ஆட்சி அமைத்தால் நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் தீரும் என்று கூறி வருகின்றார்.
இவ்வாறு கூறுவது மிக எளிது. ஆனால், சுமை தாங்கும் போது தெரியும் கடினம். இவ்வாறன பிரச்சினைகளிற்கு தீர்வுகளை காண நம் சமகி ஜன பல வேகய கட்சிக்கு மாத்திரமே உள்ளது.
மைத்திரிபால சிரிசேன கூறுவது, அடுத்த ஜனாதிபதி அவர் என்று. அவர் அதை முடிவு செய்ய முடியாது நாட்டில் உள்ள மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
மக்களின் கையில்தான் உள்ளது சிறந்த தலைவரை தேர்ந்து எடுக்க. ஆனால், தேர்தல்களை வைப்பதற்கு நம் அரசாங்கம் பயப்படுகின்றது. காரணம் தற்போது உள்ள அரசாங்கத்திற்கு தெரியும் தேர்தல் வைப்பின் அவர்களிற்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டும் என்று
எதிர்காலத்தில் எதிர்கட்சியினர் மாத்திரமே நாட்டை காப்பாற்ற முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.