அன்புக்குரியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: பொதுமக்களிடம் சுகாதார சங்கம் விடுத்துள்ள கோரிக்கை!

அரசியல் கூட்டங்களை நடத்துவதால் நாடு முழுவதும் கொரோனாத் தொற்று வைரஸ் வேகமாக பரவி வருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

தற்போது உலகில் கொரோனாத்; தொற்றின் அதிக ஆபத்து உள்ளது. ஒமிக்ரான் மாறுபாடு நாடு மற்றும் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகின்றது.

தற்போது நிலவும் சூழ்நிலைக்கு மத்தியில், நாட்டின் பொருளாதாரத்தின் பலவீனமான நிலை காரணமாக, வழமை போன்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் சட்ட ஏற்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேவையற்ற அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தேவையற்ற அரசியல் கூட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் காரணமாக நாடு மீண்டும் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்கள் அன்புக்குரியவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பொறுப்பான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தைப்பொங்கலை முன்னிட்டு யாழில் வர்த்தக சந்தை ஆரம்பம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *