
மூதூர் – அறபா நகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று காலை எரிவாயு அடுப்பொன்று வெடித்துள்ளது.
காலை உணவை தயார்படுத்துவதற்காக அடுப்பினை எரிய வைத்த சமயத்தில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது.
இச்சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
சுமார் பத்து நாட்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட எரிவாயு அடுப்பே இவ்வாறு வெடித்துச் சேதமாகியுள்ளது.
கிளிநொச்சியில் 39 டெங்கு நோயாளர்கள் அடையாளம்: மக்களுக்கு எச்சரிக்கை!