
பயிற்சி பெற்ற இலங்கையர்களுக்கு லிபியாவில் தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான லிபியா தூதரகத்தின் தொழிலாளர் பிரிவின் தலைவர் மற்றும் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர், மேஜர் ஜெனரல் மஹிந்த ஹதுருசிங்கவிற்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
லிபிய பொருளாதாரம் தற்போது மிகவும் ஸ்திரமாக உள்ளதாகவும், நாட்டில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மை காரணமாக, இலங்கை பயிற்சி தொழிலாளர்களுக்கு அந்நாட்டில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்காக லிபிய அரசாங்கத்துடன் இலங்கை ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என இலங்கைக்கான லிபியா தூதரகத்தின் தொழிலாளர் பிரிவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.