மைத்திரியை தூக்கி விட்டதே நாம் தான் – ஐ.தே.க திடீர் பாய்ச்சல்!

முன்னாள் ஜனாதிபதி திடீரென அவரின் அரசியல் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளமை சிந்திக்க வேண்டிய விடயம் என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கே தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மைத்திரிபால என்ன கூறினாலும் பரவாயில்லை. ஆனால், அவர் ஆட்சியில் இருந்த காலங்களில் அவரை அந்த இடத்திற்கு கொண்டு சென்ற ஐக்கிய தேசியக் கட்சியைத் தூற்றி பேசுவது சிறந்த விடயம் அல்ல.

எங்களுடைய கட்சியின் பெயரை வீணடிப்பது ஒரு சிறந்த விடயம் அல்ல.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால நாட்டில் பாதுகாப்பை இல்லாமல் செய்தார். இன்று உள்ள ஆட்சியும், கடந்த ஆட்சியைப் போலத்தான் உள்ளது.

ஆகவே, இவ்வாரான பொய் கருத்துக்களை ஏற்காமல், உண்மையான கருத்துக்களை ஏற்போம். சிறந்த நாட்டை கட்டி எழுப்புவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *