இடியன் துப்பாக்கி வெடித்ததில் இளைஞன் படுகாயம்: இருவர் கைது

முல்லைத்தீவு – விசுவமடு பாரதிபுரம் கிராமத்தில் இடியன் துப்பாக்கி வெடித்த சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்நிலையில், புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாவட்ட மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நேற்று மாலை குடும்ப உறவினர்களுக்கிடையில் இடம்பெற்ற முரண்பாட்டு சபம்வத்தின் போது இடியன் துப்பாக்கி வெடித்ததில் குறித்த இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

இதன்போது 22 வயதுடைய பாரதிபுரம் கிராமத்தினைச் சேர்ந்த சபிசன் என்ற இளைஞன் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உறவுமுறையான 47 மற்றும் 32 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரை புதுக்குடியிருப்பு பொலிசார் கைதுசெய்துள்ளார்கள்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் முன்னெடுத்து வருவதுடன், இன்று சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு கிளிநொச்சி தடயவியல் பொலிசார் வரவளைக்கப்பட்டு வெடித்த இடியன் துப்பாக்கி மற்றும் தடயங்கள் என்பன விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றார்கள்.

மைத்திரியை தூக்கி விட்டதே நாம் தான் – ஐ.தே.க திடீர் பாய்ச்சல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *