ஐந்து வாகனக்களை கொடூரமாக மோதி தள்ளிய பேருந்து: சாரதி தப்பி ஓட்டம்!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலைமன்னார் பிரதான வீதி ஸ்ரேடியம் சந்தி பகுதியில் பாரிய விபத்து சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

பிரதேச செயலகத்திற்கு சொந்தமான வாகனம், டிப்பர், முச்சக்கர வண்டி, துவிச்சக்கர வண்டி என வரிசையில் சமிஞ்சைக்காக காத்திருந்த வாகனங்களை ஆஸ்பத்திரி வீதியூடாக ஸ்ரேடியம் நோக்கி பயணித்த பேருந்து மோதித் தள்ளியுள்ளது.

குறித்த பேருந்தானது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சமிஞ்சைக்காக காத்திருந்த ஏனைய வாகனங்களை மோதித்தள்ளியதில் முச்சக்கர வண்டி முற்று முழுதாக சேதமடைந்ததுடன், ஏனைய வாகன சாரதிகள் சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்நிலையில், விபத்தை ஏற்படுத்திய சாரதி அருகில் இருந்த வீதி ஒன்றில் பேருந்தை நிறுத்தி விட்டு தப்பித்து சென்றுள்ளார்.

இதனைத்தொடர்ந்து, மன்னார் பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *