பொய்யான தகவலை வழங்கியதை ஒப்புக்கொண்டார் நோவக் ஜோகோவிச்!

அவுஸ்ரேலிய நுழைவு அனுமதிக்கான விண்ணப்பப்படிவத்தில், போலி தகவலை உள்ளடக்கியதாக உலகின் முதல்நிலை டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் ஒப்புக்கொண்டுள்ளார்.

அவுஸ்ரேலியாவிற்குள் கடந்த 6ஆம் திகதி நுழைவதற்கு 14 நாட்களுக்கு முன்னர், தாம் எங்கும் பயணிக்கவில்லை என ஜொக்கோவிச், தமது விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஆயினும் அவர் இரண்டு வாரக்காலப்பகுதியில் சேர்பியாவிலும் ஸ்பெயினிலும் பயணங்களை மேற்கொண்டிருந்தமை தொடர்பாக சமுக வலைத்தளங்களில் ஆதாரங்கள் வெளியாகின.

இந்நிலையில், குறித்த விண்ணப்பப் படிவத்தில், பயண வரலாறு தொடர்பான பிரிவை நிரப்பிய போது தமது முகவர் தவறிழைத்து விட்டதாக நோவக் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *