சிறையிலிருந்தவாறே – மேற்படிப்பைத் தொடர ரஞ்சனுக்கு அனுமதி!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும்நிலையில், உயர் கல்வியை தொடர்வதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

ரஞ்சன் ராமநாயக்க விடுத்த கோரிக்கைக்கு அமைய சிறைச்சாலை திணைக்களத்தால் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாவல திறந்த பல்கலைக்கழகத்தின் ஊடாக முகாமைத்துவம், தலைமைத்துவம், இளைஞர் மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கல்வியை கற்பதற்காக அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சூம் தொழில்நுட்பம் ஊடாக விரிவுரைகளை தொடர ரஞ்சன் ராமநாயக்கவுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *