
முல்லைத்தீவு விசுவமடு பாரதிபுரம் கிராமத்தில் இடியன் துப்பாக்கி வெடித்ததால், இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நேற்றுமுன்தினம் மாலை, குடும்ப உறவினர்களுக்கிடையில் இடம்பெற்ற முரண்பாட்டின்போது இடியன் துப்பாக்கியால் சூடு நடத்தப்பட்டது என்று விசாரணையில் கூறப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில், பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்தத சபிசன் (வயது –22)என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாடடில், காயமடைந்த இளைஞனின் உறவு முறையான 47 மற்றும் 32 வயதுடைய இருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குற்றச் சம்பவம் இடம்பெற்ற இடத்தில், பொலிஸ் தடயவியல் பிரிவினர் நேற்று தடயங்களைச் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
விசாரணை தொடர்கின்றது என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.