மின்வெட்டு இன்று அமுல்படுத்தப்படமாட்டாது – மின்சார சபை

நாட்டில் இன்று (புதன்கிழமை) மாலை முதல் ஒரு மணித்தியால மின்வெட்டு என இன்று காலை அறிவித்த மின்சார சபை, தற்போது தனது முடிவை மீளப்பெற்றுள்ளதுடன், இனி மின்வெட்டு இருக்காது என தெரிவித்துள்ளது.

நேற்று மாலை பழுதடைந்த தனியாருக்குச் சொந்தமான 172 மெகா வொட் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் ஏற்பட்டிருந்த கோளாறு சீரமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் மேலதிக செயலாளரும் ஊடகப் பேச்சாளருமான சுகத் தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார்.

மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நான்கு வலயங்களில் இன்று மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை ஒரு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார சபை ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், அனல்மின் நிலையம் தற்போது பழுதுபார்க்கப்பட்டுள்ளதால் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாதென மின்சார சபை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *