மூன்றாவது ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை நடத்தியது வடகொரியா!

கிம் ஜாங்-உன் மேற்பார்வையில் வடகொரியா நேற்று மீண்டும், கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஏவுகணையை பரிசோதித்துள்ளது.

இது வட கொரியாவின் மூன்றாவது ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜகாங் மாகாணத்தில் நடத்தப்பட்ட இந்த ஏவுகணை சோதனையின் போது ஏவுகணை 700 கிலோமீற்றர் வரை சென்று கடலில் விழுந்தது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏவுகணை சோதனையை மேற்கொண்டிருந்த நிலையில் இதனை கண்டித்து அமெரிக்கா உட்பட ஆறு நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *