
நாடாளுமன்றுக்கு வருகைதரவுள்ள ஊடகவியலாளர்களுக்கு அன்ரிஜன் பரிசோதனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 18ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் போது, நாடாளுமன்றுக்கு வருகைத்தரும் ஊடகவியலாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் உடனடி அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அன்றைய தினம் காலை 7 மணி தொடக்கம் 10 மணிவரை இவ்வாறு அன்ரிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.