இரசாயன விவசாயம் எனது 32 வருட அரசியல் வாழ்வை பாழாக்கி விட்டது! மஹிந்தானந்த

இரசாயன விவசாயம் எனது 32 வருட அரசியல் வாழ்க்கையை பாழாக்கி விட்டது என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

பெரும்போகத்தில் இரசாயன விவசாயத் திட்டம் தொடர்பாக விவசாயிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் நியாயமற்றவை என்று நான் நினைக்கவில்லை.

இந்தப் பணியைச் செயற்படுத்தச் சென்றபோது எனது 32 ஆண்டு கால அரசியல் பாழாகி விட்டது.

எனினும், இது நாட்டுக்கும் மக்களுக்கும் மிகவும் முக்கியமான வேலைத்திட்டம் என்பதால், எதிர்காலத்திலும் இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்ய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துடன் நான் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றேன் அவர் தெரிவித்தார்.

மீசாலை அல்லாரை கிராமத்தில் 15 ஆடி நீளமான மலைப்பாம்பு ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *