5 ஆவது மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை!

குற்றப்புலனாய்வுத் திணைக்கள கட்டடத்தின் 5ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.
நேற்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

46 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். குறித்த பெண் 60 மில்லியன் ரூபா நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது இவ்வாறு தற்கொலை செய்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *