‘நேர்மைக்கு மகுடம்’  விருதைப் பெற்றார் தெல்லிப்பழை செயலர் சிவஸ்ரீ! 

தெல்லிப்பழை பிரதேச செயலருக்கு ‘நேர்மைக்கு மகுடம்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

ஊழல் மற்றும் இலஞ்சமற்ற சிறந்த ஆளுமைமிக்க அரச சேவையாளருக்காக குறித்த விருது தெல்லிப்பழை பிரதேச செயலர் சண்முகராஜா சிவஸ்ரீக்கு நேற்று வழங்கப்பட்டது.

கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் சிவஸ்ரீக்கு குறித்த விருது வழங்கப்பட்டது.

ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் நேர்மையான அரச அலுவலர்களைக்  கௌரவித்து பாராட்டி நேர்மைக்கு மகுடம் விருதுகளை வருடாந்தம் வழங்கி வருகின்றது.

அந்த வகையில் இம்முறையும் அகில இலங்கை ரீதியில் 10 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *