
திரவ பெற்றோலிய (LP) எரிவாயு, சிலிண்டர் வால்வுகள், ரெகுலேட்டர்கள் உள்ளிட்ட பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு (SLSI) அதிகாரம் அளிக்கும் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, திரவ பெற்றோலிய (LP) எரிவாயு மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்களுக்குப் பரிசோதனைகளின் பின்னர். இலங்கை தர நிர்ணய நிறுவனத்தினால் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
இலங்கையில் கடந்த ஒரு மாத காலமாக எரிவாயு கொள்கலன்களில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவங்களை அடுத்து நீதிமன்றத்தில் எரிவாயு நிறுவனங்கள் இணங்கிக்கொண்டமைக்கு அமையவே இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.