
ஹபரனை – ஹதராஸ்கொடுவ பிரதேசத்தில் ஒரு வயது குழந்தையொன்று குழியொன்றுக்குள் விழுந்து பரிதாபமாக பலியாகியுள்ளது.
நீர் பெறுவதற்காக புதிதாக வெட்டப்பட்டிருந்த குழியொன்றுக்குள் விழுந்தே குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.
குழந்தையின் தாய் அருகில் உள்ள உறவினரின் வீடொன்றுக்கு சென்றுள்ள சந்தர்ப்பத்தில், குழந்தை இவ்வாறு வீட்டுக்கு பின்புறமாக வெட்டப்பட்டிருந்த குழிக்குள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.