
இந்த அரசாங்கத்தைப் போல் பிச்சை எடுக்காமல் இருக்க நீங்கள் என்னை விமர்சிக்காமல் அனைவரும் ஒன்றாக இணைந்து எனக்கு கொஞ்சம் பணம் மற்றும் பரிசுகளை வழங்குங்கள் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி பெல்மதுளைப் பகுதியில் நடைபெற்ற சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
என்னைச் சிறையில் அடைக்க சிலர் சதித் திட்டம் தீட்டுகின்றார்கள்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய விபரங்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும்.
இந்த அரசாங்கத்தைப் போல் பிச்சை எடுக்காமல் இருக்க நீங்கள் என்னை விமர்சிக்காமல் அனைவரும் ஒன்றாக இணைந்து எனக்கு கொஞ்சம் பணம் மற்றும் பரிசுகளை வழங்குங்கள்.
உணவு, எரிவாயு, எரிபொருள், உரம் போன்ற பிரச்சினைகள் இந்த நாட்டு மக்களால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகள் அல்ல. இவை அனைத்தும் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகள்.
அவர்களைப் பற்றிப் பேசினால் கோபம் வரும். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்திவிட்டு குற்றசாட்டை என் மீது சுமத்த முயல்கின்றனர்.
நான் ஜனாதிபதியாக இருந்தபோது ஐந்து ஆணைக்குழுக்களை நியமித்தேன்.
ஆனால் மோசடி மற்றும் ஊழல் தொடர்பாக நான் நியமித்த நான்கு ஆணைக்குழுக்கள் பற்றி எவரும் பேசுவதில்லை. இவை அனைத்தும் ஆணைக்குழுக்களின் பெட்டியில் உள்ளன.
என்னைச் சிறையில் அடைக்க நினைப்பவர்கள் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழு பற்றிப் பேசுகிறார்கள்.
குறித்த ஆணைக்குழு பற்றி ஒரு நாள் உங்களுக்குச் சொல்ல எனக்கு வாய்ப்பு கிடைக்கும். அப்போது அதைப் பற்றி நான் உங்களுக்கு சொல்வேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.