முதலை வேட்டை – கொழும்பு கடற்கரையை சுற்றி புதியவகை பொறிகள்

கொழும்பு கடற்கரை பகுதிகளில் உள்ள முதலைகளைப் பிடிப்பதற்காக புதிய வகை பொறிகளை வனவிலங்கு அதிகாரிகள் அமைத்துள்ளனர்.

நேற்றைய தினம் கொழும்பு துறைமுக நகர கடற்கரையில் முதலை இருந்தமையை காட்டும் புகைப்படங்கள் வெளியாகியிருந்தமையை தொடர்ந்து குறித்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று இரவு, முதலை கடலிலிருந்து பேர வாவிக்குள் செல்வதை வனவிலங்கு அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.

முதலைகளை கவரும் வகையில் இறைச்சித்துண்டு வைக்கப்பட்ட புதிய வகை பொறி ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவைகள் மேற்படி வாவியின் வாய்க்காலின் இரண்டு பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *