200 மில்லியன் ஆண்டுகளில் இலங்கை இந்தியாவின் ஒரு பகுதியாக மாறும் -ஆய்வில் தகவல்!

200 மில்லியன் ஆண்டுகளில், கிழக்கு ஆப்பிரிக்க நாடுகள் இந்தியாவின் மேல் பகுதியுடன் இணைவதன் மூலம் ‘இந்தியாவின் நவீன மேற்குக் கடற்கரையில் நீண்ட மலைத்தொடரை உருவாக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பூமிக்கு கீழே உள்ள டெக்டோனிக் தகடுகள் தொடர்ந்து நகர்ந்து வருவதால், அனைத்து கண்டங்களும் தொடர்ச்சியாக நகர்ந்து வருகின்றன.

இதன்படி, இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளில், இலங்கை இந்தியத் துணைக்கண்டத்தின் ஒரு பகுதியாக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

”அமெரிக்கன் ஜெர்னல் ஆப் சயின்ஸ்” என்ற இதழில் உட்ரெக்ட் பல்கலைக்கழக புவியியலாளர் பேராசிரியர் டூவே வான் ஹின்ஸ்பெர்கன் எழுதியுள்ள ஆய்வுக்கட்டுரையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

உலகின் உள் பாறை மண்டலத்தின் பகுதிகளான டெக்டோனிக் தகடுகள் மெதுவாக ஆனால் நிச்சயமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்து வருகின்றன.
இந்தியாவின் மேற்கு கடற்கரை சோமாலய மலைகளால் மாற்றப்படுவதால் மும்பையில் கடல் இல்லாமல் போகும் எனவும் ஆய்வுக் கட்டுரை கூறுகின்றது.

சீஷெல்ஸ் மற்றும் மொரிஷியஸ் தீவுகள் அனைத்தும் மேலே தள்ளப்பட்டு மும்பை சோமாலியா மலைத்தொடரின் அடிவாரத்தில் இருக்கும் என்று ஆய்வுக் குழு குறிப்பிட்டுள்ளது.

மொகடிசுவும் மும்பையும் இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளில் அண்டை நாடுகளாக மாறும், கொல்கத்தாவும் மொரீஷியஸும் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *