
யாழ்,மானிப்பாய் சோலையடிவேம்பு, கிராம சேவையாளர் பிரிவில் குறைந்த வருமானங்களைக் கொண்ட 30 குடும்பங்களுக்கு உலர் உணவு நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
பூமணி அம்மா அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவரும் சர்வதேச தமிழ் வானொலி பிரான்ஸ்(ITR)பணிப்பாளருமான யாழ், தீவகம்,சரவணையை சேர்ந்த திரு விசுவாசம் செல்வராசாவின் நெறிப்படுத்தலில் நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
பூமணி அம்மா அறக்கட்டளையின் வாழ்வாதார நிவாரண உதவிப் பணியாக அறக்கட்டளையின் இலங்கை நிர்வாகிகளான செயலாளர்,ந.விந்தன் கனகரட்ணம், இணைத் தலைவர்களான T. யோசேப்,நா.தனேந்திரன் உப செயலாளர் இ.சற்குருநாதன் ஆலோசகர் இ.மயில்வாகனம் நிர்வாகசபை உறுப்பினர் மதன்ராஜ் கிராம சேவையாளர் நந்தரூபி போன்றோரால் இந்த பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.


