புத்தளம் – உடப்பில் நாளை தேர்த்திருவிழா

புத்தளம் மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா நாளை (13) இடம்பெறவுள்ளது.

ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவம் கடந்த 5ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்றைய தினம் வேட்டைத் திருவிழாவும், நாளை வசந்த மண்டப பூஜையைத் தொடர்ந்து தேர்த்திருவிழாவும், 14 ஆம் திகதி தீர்த்த உற்சாகத்துடன் பிரமோற்சவம் நிறைவு பெறவுள்ளது.

கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக குறித்த பிரமோற்சவ விழா இடம்பெறாத நிலையில், இம்முறை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *