சிங்கமலை வன பிரதேசத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியிலிருந்து ஆணின் சடலம் கண்டெடுப்பு!

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹட்டன் சிங்கமலை வன பிரதேசத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியிலிருந்து இன்று (திங்கட்கிழமை) ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அணைக்கட்டு பகுதியில் சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின்னர் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தைக் கண்டெடுத்துள்ளனர்.

மீட்கப்பட்ட ஆண் குளிக்கும்போது தவறி விழுந்தாரா அல்லது எவராவது கொலை செய்துள்ளனரா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கண்டெடுக்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை என்றும் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *