

நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் இருந்து மஸ்கெலியா நோக்கி வந்த கார் ஒன்று ரிக்காடன் கிராம பகுதிகளில் மின்கம்பத்தில் மோதுண்டதால், 3 பேர் காயமடைந்துள்ளனர்.
இவ் விபத்து இன்று மதியம் ஒரு மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் காயமடைந்த மூவரும் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் மின் கம்பம் சரிந்ததால் வாகன போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில், நல்லதண்ணி பொலிஸ் நிலைய அதிகாரி நேரில் வந்து பார்வையிட்டதுடன், போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தேவாலயத்தில் கைக்குண்டு: விசாரணையில் அதிருப்தி வெளியிட்ட அனைத்து புனிதர்களின் திருச்சபை!