அதிகாரியை கடித்த மலைப்பாம்பு – புத்தளத்தில் சம்பவம்

புத்தளம் பகுதியில் நேற்று இரவு தோட்டமொன்றிற்குள் உட்புகுந்த மலைப்பாம்பை அவதானித்த பிரதேச மக்கள், உயிருடன் பிடித்து வனஜீவராசிகள் கட்டுப்பாட்டுப் பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இந்த நிலையில் ஒப்படைக்கப்பட்ட மலைப்பாம்பை இன்று சரணாலயத்தில் விடுவிப்பதற்காக கடும் பிரியத்தனத்திற்கு மத்தியில் பிடிப்பதற்கு முற்பட்ட வேளை புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள வலையப் பொறுப்பதிகாரியை மலைப்பாம்பு தீண்டியுள்ளது.

இதன்போது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 9 அடி நீளமுடைய மலைப்பாம்பு, தப்போவ சரணாலயத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *