இந்திய அமைச்சர் இலங்கை வருகை!

இந்திய அரசின் நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும்  நிகழ்வில் கலந்துகொள்வதற்காக  யாழ்ப்பாணத்துக்கு இன்று மதியம்  வருகை தரும் இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் இன்று மதியம் விமானத்தின் மூலம் பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளதோடு இன்று மதியம் வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து மதிய விருந்துப சாரத்திலும் கலந்து கொள்ளவுள்ளார்.

அதன் பின்னர் யாழ். பொது நூலகத்தில் இடம்பெறுகின்ற உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்விலும் கலந்து கொள்ள உள்ளார்.

அதன் பின்னர் காங்கேசன்துறைக்கு செல்ல உள்ள அமைச்சர் காங்கேசன்துறைக்கும்  காரைக்காலுக்கும் இடையிலான கப்பல் சேவை ஆரம்பிப்பது தொடர்பிலான கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.

நாளைய தினம் இந்திய அரசின் நிதி பங்களிப்பில்புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள  மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு செல்ல உள்ளதாக இந்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *