முகமாலையில் மனித எச்சங்களும், சான்று பொருட்களும் மீட்பு!

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பிரிவினரால் மனித எச்சம் ஒன்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவானுக்கு தகவல் வழங்கப்பட்டமையை தொடர்ந்து குறித்த பகுதிக்கு இன்று (புதன்கிழமை) சென்ற  கிளிநொச்சி மாவட்ட நீதவான் குறித்த பகுதியை பார்வையிட்டிருந்தார்.

இதனையடுத்து நீதவானின் அனுமதியுடன் இன்று குறித்த பகுதியில் மேலும் அடையாளப்படுத்தபட்ட இடங்களில் அகழ்வு பணிகள் இடம்பெற்றுள்ளது.

முதல் நாளான இன்று வெடிபொருளும், எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அகழ்வு பணிகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *