திருகோணமலையில் மீண்டும் அதிகரித்துவரும் கோவிட் : மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை….!

திருகோணமலை மாவட்டத்தில் மீண்டும் கோவிட் தொற்றாளர்களின் வீதம் அதிகரித்து வருவதாகத் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமை நேர வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இதனடிப்படையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (19) காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை மூலம் 18 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதில் கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வயதுடைய இரட்டை குழந்தைகளுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் தம்பலகாமம், கன்னியா, நிலாவெளி மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகம் போன்ற இடங்களில் தொற்றாளர்கள் மேலும் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் வைத்தியசாலைக்கு வரும் போதும் பாதுகாப்பாகச் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி முகக் கவசங்கள் அணிந்து வருகை தருமாறும் மக்கள் அதிகம் நடமாடும் இடங்களுக்குச் செல்ல வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *