சீனாவை நம்பினால் இலங்கை கதி அபேஸ் தான்! – முஜிபுர் ரஹ்மான் எம்.பி

ஒரு நாட்டிடம் கடன் வாங்கி இன்னொரு நாட்டின் கடனை அடைப்பது முட்டாள் தனமானது என எதிர்க்கட்சி நாடளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடனை திருப்பிச் செலுத்தாத காரணத்தினால் இலங்கை எதிர்நோக்கியுள்ள நிதி நெருக்கடி, இலங்கையின் நிலைப்பாடு என்ன? என்று அனைவரும் உணர வேண்டும்.

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடாமல், நிதி உதவிக்காக சீனாவை நம்பி இருப்பதால் பாரிய நிதி நெருக்கடிக்கு முகம்கொடுக்கவேண்டியுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டு பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு சீனாவிடமிருந்து 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான அந்நியச் செலாவணி கிடைத்துள்ளதுடன், அரசாங்கத்தினால் அந்த கடனை மீள செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தை நாடாமல் நிதி உதவிக்காக சீனாவை நம்பி இருப்பதால் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு 2.9 பில்லியன் டொலர்களாக வீழ்ச்சியடைந்து.

இதனால் நாட்டில் நிதி நெருக்கடியை தோற்றுவித்துள்ளதுடன், வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ளதுடன் உணவு நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.- என்றார்.

கோட்டாவால் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் இளைஞர்கள்! – சஜித் சாடல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *