
நாட்டில் உள்ள இளைஞர்களை இந்த கோட்டா அரசாங்கம் வெளிநாட்டுக்கு துரத்தியுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள பிரச்சினைகள் இப்போது தீரவில்லை. ஆனால், பயங்கரவாதம், தேசிய பாதுகாப்பு என்று கூறி இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள்.
இஸ்லாமிய சமூகத்தை இவர்கள் இப்போது துன்புறுத்துகின்றனர். ஈஸ்டர் தாக்குதலுக்கு இன்னமும் பதில் கிடைவில்லை.
நாட்டில் வாழ முடியாது என்று இங்குள்ள இளைஞர்கள் வெளிநாட்டுக்கு செல்கின்றனர். இளைஞர்கள் இங்கு இல்லை என்றால் எதிர்காலத்தில் இந்த நாட்டை பாதுகாப்பது யார்?
வாழும் மக்களிடம் பணம் இல்லை, நாட்டில் டொலர் இல்லை. கொரோனாவை காரணம் காட்ட வேண்டாம். உலக நாடுகளும் கொரோனா தொற்றுக்கு இலக்கியாகியுள்ளது. ஆனால் அங்குள்ள மக்கள் வரிசையில் நிற்கவில்லை.- என்றார்.