சுதந்திரதினத்தன்று ரஞ்சன் விடுதலை?

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நேற்று தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்து, சுகநலம் விசாரிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் நேற்று வெலிக்கடை சிறைக்கு சென்றிருந்தார்.

சிறைக்கு செல்வதற்கு முன்னர் ஜனாதிபதிக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித், ரஞ்சன் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதியிடம் இருந்து விரைவில் சாதகமான முடிவு கிடைக்கும் என சஜித் பிரேமதாச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சுதந்திர தினத்தன்று ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படலாம் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சிலர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *