பேருந்தோடு நேருக்கு நேர் மோதிய உந்துருளி – இளைஞனின் உயிரை காவு வாங்கிய கோர விபத்து

புலத்சிங்கள ஹொரண வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புலத்சிங்கள ஹொரண கோவின்ன சல்காஸ் சந்தியில் இன்று (11) காலை உந்துருளியும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.

மிகோஸ் மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான கௌசல்ய சாமர பெரேரா என்ற நபரே உயிரிழந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவர் மேலும் இருவருடன் உந்துருளியில் ஹொரண பிரதேசத்தில் இருந்து புலத்சிங்கள நோக்கி பயணித்த போது மத்துகமவில் இருந்து ஹொரணை நோக்கி ஓடும் தனியார் பேரூந்தில் மோதி விபத்துக்குள்ளானதாக புலத்சிங்கள காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த உந்துருளி பெறுமதி சுமார் 25 இலட்சம் ரூபா என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த குறித்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாகவும், சடலம் ஹொரணை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *